Title of the document
மாணவர்களது திறமையை வெளிக்கொணர்ந்து சிறந்த இன்ஜினியர்களாக உருவாக்க வேண்டும்,'' என, கோவை பி.வி.ஆர்., புட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுபத்ரா பேசினார்.

மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர் தினம், பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

அதில், சுபத்ரா பேசுகையில், ''ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். புதிய, புதிய தகவல்களை சொல்லித்தர வேண்டும். மாணவர்களது திறமையை வெளிக்கொணர்ந்து, சிறந்த இன்ஜினியர்களாக உருவாக்க வேண்டும். இந்தியா தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தொழில்துறையில் புதிதாக கண்டுபிடித்து, பிறருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

கல்லுாரி இணை நிர்வாக அறங்காவலர் சின்னராஜ் தலைமை வகித்தார். முதுநிலை விரிவுரையாளர் நாகராஜ் வரவேற்றார். செயலாளர் முத்துசாமி, நிர்வாக அதிகாரி பாஸ்கரன், கல்லுாரி முதல்வர் கவுசல்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியை மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ரமேஷ் ராஜா நன்றி கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post