Title of the document
சென்னையில் நடந்த, தனியார் கல்லுாரி விழாவில், அமைச்சர் அன்பழகன் பங்கேற்றார். பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக உயர் கல்வி துறையில், தேவையான முன்னேற்ற பணிகளை மேற்கொள்கிறோம். அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, தகுதி தேர்வு நடத்தப்படும். இதற்காக, கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அண்ணா பல்கலையின், 509 இணைப்பு கல்லுாரிகளிலும், பல்கலையின் வழியாக, ஒரே தேர்வு முறை தான் நடைமுறையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post