Title of the document
வேலையில் சேரும்போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வி துறை  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு சிறப்பு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்  பணி நியமனம் செய்தது.  இதுபோன்று தமிழகம் முழுவதும் 16,500 ஆசிரியர்கள் உள்ளனர். பணியில்  சேரும்போது ரூ.5 ஆயிரமும், பின்னர் படிப்படியாக  தற்போது ரூ.7,700 சம்பளம்  வழங்கப்படுகிறது. வேலைக்கு சேரும்போதே பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது  என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனாலும்,  இவர்கள் சொந்த ஊர்களுக்கு  பணிமாறுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்துக்கு 3 நாட்களும்,  அந்த மூன்று நாட்களும் 2 மணி நேரம் மட்டுமே  இவர்கள் பணி செய்வார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.  போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் துறை செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post