Title of the document
மூக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு, உணவுத்திருவிழா நடந்தது.


ஆண்டுதோறும், செப்டம்பரில், ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, மூக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த, உணவு திருவிழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமாது தலைமை வகித்தார். இதில், பழங்கால உணவு, பாரம்பரிய உணவு என்ற அடிப்படையில், அனைத்து சிறு தானிய உணவுகள், இயற்கை உணவுகளையும் மாணவ, மாணவியர் செய்து வந்திருந்தனர். இதற்கு, அறிவியல் ஆசிரியர் யமுனாபாய் முன்னிலை வகித்து, உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார். ஆசிரியர்கள் மோகனசுந்தரி, வெங்கடேசன், தமிழரசன், சுப்புலட்சுமி உள்பட, பல்வேறுதுறை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post