Title of the document
பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.

சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.
ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.
புதுமையான சீர்த்திருத்தங்கள்
பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
பெருஸ்கூலு (peruskoulu) - ஃபின்லாந்தின் கட்டாய கல்வித்திட்டத்தின் வெற்றிக்கதை இதுதான். 1970களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது.
ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையை குறித்து தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்கு காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.
"ஃபின்லாந்தின் இந்த திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூறமுடியாது" என்கிறார் அந்நாட்டை சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க்.
"மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்கு செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது."
கல்வி மற்றும் சமத்துவம்
 ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
சமத்துவமின்மை மக்களின் எதிர்பார்ப்பை தடுத்து, அவர்களின் வாங்கும் திறனை குறைக்கிறது - சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு நன்றாக இருக்கிறது என தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் பசி சல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவம் நிறைந்த சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாக பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சமநிலை அதிகமுள்ள நாடுகளில், அதிக கல்வியறிவுள்ள மக்கள் இருப்பதோடு பள்ளிப்படிப்பை கைவிடுப்வர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வருமானம் இடைவெளி குறைந்துள்ள நாடுகளில் உடல் பருமன் நோய் குறைவாகவும், நல்ல மன ஆரோக்கியம் இருப்பதாகவும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும், பாடம் கற்பிக்கும் முறைக்கும், கற்றுக் கொள்வதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு."
சமத்துவம் மற்றும் சமூக நீதி
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.
பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்கு தேவையான அனைத்தும் இலவசம்.
முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.
சமமில்லாத வருமானம், ஏழ்மை உள்ளிட்டவையும் கல்வி முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய தாக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ள முடிவதாக மேலும் அவர் புத்தகத்தில் பசி எழுதியுள்ளார்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு ஏற்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்பதற்கான பொருளாதார மாதிரி, ஃபின்லாந்தின் கல்விமுறை வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார் அவர்.
இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், குறைந்த விலையில் வீட்டுவசதி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்க ஊக்குவிக்க அவர்களுக்கு விடுமுறை மற்றும் பல நலத் திட்டங்களை இந்த பொருளாதார மாதிரி வழங்குகிறது.
ஆசிரியரின் மதிப்பு
இத்திட்டத்தின் தத்துவம் பள்ளி வகுப்பறைகளிலும் பிரதிபலித்தது.
வழக்கமான ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.
அவர்களின் வகுப்பிற்கு திட்டமிட்டு, அறிவை புதுப்பித்து, மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவது குறித்து திட்டமிட ஆசிரியர்களுக்கு போதிய நேரம் இருக்கிறது. நல்ல ஊதியத்தோடு, நல்ல சூழலில் அவர்கள் பணிபுரிகிறார்கள்.
மருத்துவம், சட்டம் மற்றும் கட்டடக்கலையில் முன்னிலை வகிக்கும் ஃபின்லாந்து மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்வதை விரும்புகின்றனர்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகளை விட ஃபின்லாந்தின் பள்ளி நேரங்கள் குறைவே - உதாரணமாக தொடக்க பள்ளியில் ஆண்டு ஒன்றுக்கு 670 மணி நேரம் மட்டுமே மாணவர்கள் செலவிடுகின்றனர். கோஸ்டா ரிகாவில் இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 1000 மணி நேரங்கள் செலவிடுகின்றனர்.
விக்கி பள்ளியில் பணியாற்றும் எர்யா ஸ்குன்க் கூறுகையில், "குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டும். வகுப்பறையில் அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, அதன் தரம்தான் முக்கியம்" என்றார். அதிக வீட்டுப்பாடம் இல்லாமல்தான் மாணவர்கள் இங்கு வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபின்லாந்தில் 15 வயதிலான மாணவர்கள் பள்ளிக்கு பிறகு வாரத்திற்கு சுமார் 2.8 மணி நேரங்கள் பணி புரிகின்றனர். தென் கொரியாவில் இது 2.9 மணி நேரங்களாகும்.
ஃபின்லாந்து மக்களால் எப்போதும் மகிழ்வாக இருக்க எப்படி முடிகிறது?
உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை
சில நாடுகளில் வீட்டுப்பாடத்திற்கான சராசரி நேரம் வாரத்திற்கு 4.9 மணி நேரங்கள். ஆனால், சீனாவில் இது 13.8 நேரமாக இருக்கிறது.
"மாணவர்கள் என்ன கற்க வேண்டுமோ அதனை வகுப்பறையில் கற்கிறார்கள். பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என மற்ற முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்" என்கிறார் மற்றொரு ஆசிரியரான மார்ட்டி மெரி.
நல்ல சூழல்
 பள்ளியின் சூழல் அமைதியானதாக உள்ளது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
பள்ளி சீருடைகள் எல்லாம் கிடையாது. மாணவர்கள் அவர்களது சாக்சுகளோடு கூட சுற்றலாம். ஸ்கான்டினேவியன் பள்ளிகளில் யாரும் ஷூ அணிந்திருக்க மாட்டார்கள்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
ஃபின்லாந்து மாணவர்கள் தேர்வுகள் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. கல்வியில் சேரும் முதல் 5 ஆண்டுகளில் தேர்வுகளே கிடையாது. பின்னர், வகுப்பறையில் மாணவர்கள் அவர்களின் திறனை வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.
போதிய ஆதரவும், வாய்ப்பும் அளித்தால், எதையும் கற்றுக்கொள்வதற்கான ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதுதான் இந்த அமைப்பின் நடைமுறை.
பதற்றம் இல்லாமல் மாணவர்கள் படிக்க உதவ வேண்டும் என்பதையே ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஒன்றை கற்றுக்கொள்ள இயற்கையாகவே ஆர்வத்தை வரவைக்க வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் கல்வி கிடையாது.
ஆய்வு முடிவுகளின்படி, 7 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே கணிதம் பயில்வது குறித்து பதற்றமடைகிறார்கள். ஜப்பானின் கண்டிப்பான அமைப்பில் இது 52 சதவீதமாக உள்ளது.
மக்கள் நலன்
ஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூக திட்டங்களும், அந்நாட்டு கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
எனினும், 2018ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது.
பசி சல்பர்க் கூறுகையில், "சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூக திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது" என்கிறார்.
"நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாக கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்".
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post