கடந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றும் பள்ளிகளுக்கு `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதிலும் இந்த விருதுக்காக அகில இந்திய அளவில் 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட 52 பள்ளிகளில் காரைக்கால் அகலங்கன்னு - அரசு தொடக்கப்பள்ளியும் கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பள்ளிகளும் இந்திய அளவில் `சுவாச் வித்யாலயா புரஷ்கார்' விருது பெற்றதால் காரைக்கால் மாவட்டம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.