மதுரையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளை கூட்டம் நடந்தது. தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் மோகன் வரவேற்றார். வரவு, செலவு கணக்கை பொருளாளர் பாலாபிேஷகம் சமர்ப்பித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல், மருத்துவப்படி 1000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
ஊதியக்குழு உயர்வு சம்பந்தமான நிலுவைத் தொகையை விரைவில் அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களிடம் வருமானவரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்
Post a Comment