Title of the document

அரசு மருத்துவர்கள், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கான, 1.4 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள், மாணவர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டது. குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளில், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.

இம்மையத்தில், அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள், சிக்கலான நேரங்களில் செயல்பட வேண்டிய விதம் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளித்து, உயிரிழப்பை தடுக்க முடியும் என, கருதப்பட்டது. தற்போது இதற்காக, 1.40 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன், அசோகன் கூறுகையில், &'&'அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு, மூச்சு குறித்த பரிசோதனைகள் அவசியம். இத்தகைய நோயாளிகளுக்கு, விரைந்து செயல்பட்டால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும். 
&'&'புதிதாக வரும் மாணவர்களுக்கு, இதுகுறித்து ஏட்டளவில் மட்டுமே தெரிந்திருக்கும். அவர்களை விரைந்து செயல்பட வைக்க, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இதேபோல் பல்வேறு பயிற்சிகள் மையத்தில் வழங்கப்படும். இதற்கான, நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் துவங்க உள்ளன,&'&' என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post