Title of the document
கல்வித்துறை அமைச்சர்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம், 11-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்து இருக்கிறது.
11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1200 மதிப்பெண் பெற வேண்டும் என இருந்தது. அதனை ஒரே தேர்வாக மாற்றி (பிளஸ்-1ல் 600, பிளஸ்-2ல் 600) அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
பிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண் என முன்பு இருந்தது 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும். பிளஸ்-2 தேர்வில் எடுக்கப்படும் 600 மதிப்பெண் உயர்கல்விக்கு செல்லத் தகுதியாக கருதப்படும்.
6 பாடத்திற்கு மட்டும் 600 மார்க் வீதம் உயர் கல்விக்கு செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு பொது தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் சமயம், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் களையப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு தனித்தனியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருக்கிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post