Title of the document


ஆசிரியர் தகுதித் தேர்வுஎழுதியவர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியின் நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,
கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையானt உதவிகள் வழங்கப்படும். தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளன.
கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post