Title of the document



சேலம் : அரசு துவக்கப் பள்ளிக்கு, ஐந்து டிராக்டர்களில், கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

சேலம் மாவட்டம், முத்தானுாரில், 64 ஆண்டு களாக, அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முத்தானுார், கட்டபுளியமரம், விநாயகர் நகர், கட்டியப்பன்புதுார் உள்ளிட்ட கிராம மக்கள், நேற்று கல்விச்சீர் வழங்கினர்.

மேள தாளம் முழங்க, வகுப்பறைக்கு தேவையான ஐந்து பீரோ, டேபிள், சேர், மின் விசிறி, ஸ்டாண்ட், நோட்டு, புத்தகங்களை, ஐந்து டிராக்டர்களில், மக்கள் ஏற்றிச் சென்றனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பள்ளியில் விழா நடந்தது. மாணவ - மாணவியர் பங்கேற்ற, பேச்சு போட்டி, பழமொழி ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி புரவலர் திட்டத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கினர்.


சீர் வழங்கிய சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம், கையெழுத்து பயிற்சி சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, குழந்தைகள் அதிகம் சேர்கின்றனர். பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில் தான், அனைத்து, மாணவ - மாணவியரும் நெருக்கடியாக அமர்ந்து படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதுமை பள்ளி விருது :


அரியலுார் மாவட்டம், சோழன்குடிகாடு கிராமத் தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, 10 ஆண்டுகளாக, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 2017 - 18 கல்வியாண்டில், இப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வெழுதிய, 81 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதனால், தமிழக அரசு, 2017 - 18 கல்வி ஆண்டுக்கான, புதுமைப் பள்ளி விருதுக்கு, சோழன்குடிகாடு பள்ளியை தேர்வு செய்தது. 'இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post