*🎯உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவி்ல்லை என்றால் 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது*
*🎯நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்*
*🎯யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்*
*🎯இந்நிலையில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவில்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது*
*🎯இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது*
*🎯அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது*
*🎯மேலும் முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது*
*🎯இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படவில்லை என்றும் இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment