”சட்டியில் இருந்து சுரண்டியதை திரும்ப கொண்டு வந்து சேர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு”
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என ஜாக்டோ ஜியோ கோரிக்கை குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் பதில்
மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தை கைவிட டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்த ஒரு கருணையையும் தற்போது உள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது என அவர் கூறியுள்ளார். எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்ளாது என டிடிவி குற்றம்சாட்டியுள்ளார்.