அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல்
இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 1962ல் உருவாக்கப்பட்டது.இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தின் பகுதியாக இருந்த இத்துறை, நிதித்துறையின் கீழ் தனி இயக்குனரகமாக, அனைத்து மாவட்டம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
கருவூலத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனால் அரசு துறைகளில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அந்தந்தந்த அலுவலக ஊழியர்களின் சம்பளப் பட்டியலை மாவட்ட கருவூலத்திற்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் ஊழியர்களின் வருகை பதிவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு காகிதப்பட்டியல் தயாரிக்க வேண்டும். இந்த பட்டியலை மாவட்ட கருவூல அதிகாரிகள் கணக்குத்துறை செயலருக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மை திட்டம் மூலம் கருவூலம் கணக்குத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.
இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.
மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
எனவே அரசு துறைகளில் அந்தந்த பிரிவுகளில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் காகித சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.
இதற்கான பயிற்சி மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. இதன் பின்னர் வரும் அக்டோபர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது.
மேலும் அரசுத்துறை ஊழியர்களின் பணி வரலாறு முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்