ஆசிரியர் பிரச்சனையை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி பேசாமல், தமிழக அரசு தனக்குள் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகிறது என்று ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவது என்றும் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி மட்டுமே பேசுவதாகவும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சனையை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment