Title of the document

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண் அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி  வருகிறது.  டிஜிட்டல் பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவைகள், மொபைல் வாலட்கள் என பின் நம்பர்  மற்றும் பாஸ்வேர்டு அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக ஆதார் அடிப்படையில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை வைத்தால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.  இதற்கான பொதுவான மொபைல் ஆப்  ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே நேற்று கூறுகையில், ‘‘ஆதார்  அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையை படிப்படியாக  அதிகரித்து நாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்த அடிப்படையில் மேற்கொள்ள  முடியும்’’ என்றார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க உதவும் வகையில்,  கைரேகை அல்லது கண் கருவிழியை அடையாளம் காணும் மொபைல் போன்களை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

* 108,39,95,782 பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டோர்.
* சுமார் 36 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
* ஆதார் பரிவர்த்தனைக்கு புதிதாக மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட உள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post