இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர்
பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட
செய்திக் குறிப்பில், ''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29
செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV)
பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. செயல் அலுவலர் நிலை -III
பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும்,
செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல்
மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும்.
இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர்
தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல்
விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment