Title of the document

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படும். இதில், திட்ட மதிப்பீட்டில் 25 சதவிதம் மானியமாக வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நேரடி தொடர்புள்ள இனங்களுக்கு கடனுதவி பெற இயலாது. கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு. விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஏற்கெனவே வங்கியில் கடன் வாங்கி தவணை தவறிய கடன்தாரராக இருந்தால் அவர்களுக்கு கடன் பெறத் தகுதியில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post