புது தில்லி: கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை அமைச்சகம், மத்திய சட்டத் துறை அமைச்சகத்துடன் விவாதித்து இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழியர் ஒருவர் பணிக் காலத்தின்போது உயிரிழந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் இனி திருமணமான மகன்களுக்கும் பணி வழங்கப்படும். இது தொடர்பான மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும்.
வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கும் அவர்களது தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது. (இருப்பினும், திருமணமான மகனுக்கு இத்தகு வேலைவாய்ப்பு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது.)
மருத்துவக் காரணங்களுக்காக 55 வயதுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் இதுபோல் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. டி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் இந்த வயது வரம்பு 57 ஆக உள்ளது.
மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை அமைச்சகம், மத்திய சட்டத் துறை அமைச்சகத்துடன் விவாதித்து இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழியர் ஒருவர் பணிக் காலத்தின்போது உயிரிழந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் இனி திருமணமான மகன்களுக்கும் பணி வழங்கப்படும். இது தொடர்பான மற்ற நிபந்தனைகள் பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும்.
வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கும் அவர்களது தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது. (இருப்பினும், திருமணமான மகனுக்கு இத்தகு வேலைவாய்ப்பு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது.)
மருத்துவக் காரணங்களுக்காக 55 வயதுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் இதுபோல் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. டி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் இந்த வயது வரம்பு 57 ஆக உள்ளது.
Post a Comment