Title of the document


தொலைத்தொடர்பு துறையில் புதிதாக களம் இறங்கி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், புதிய சலுகைகளுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் களத்தில் குதிக்க உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 'ரிலையன்ஸ் ஜியோ' என்ற பெயரில் புதிய தொலை தொடர்பு சேவையை துவங்கியுள்ளது. இதன் மூலம் இலவச அழைப்புகள், குறுந்தகவல், இணைய சேவை என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் மற்ற சேவை நிறுவனங்கள் கதி கலங்கி உள்ள நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஜியோவுக்கு போட்டியாக இலவச அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது பற்றி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தொலை தொடர்பு சந்தைமற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகளை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.
வரும் புத்தாண்டிலிருந்து நாங்களும் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள் உள்ளிட்ட புதிய சேவைகளை வழங்க உள்ளோம். அந்த சேவைகளும் கூட ஜியோவை விட மிக குறைந்த விலையில் இருக்கும் இவ்வாறுஅவர் தெரிவித்தார்.
ஜியோவைப் பொறுத்தவரை தன்னுடைய சேவைகளை 4ஜி வடிக்கையாளராக்களுக்கு மட்டும் அளித்து வருகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளிலும் இலவச அழைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் உள்ள மொத்த அலைபேசி இணைப்புகளில் பெரும்பா ன்மையானவை இத்தகைய இணைப்புகளில் இயங்குகின்றன என்பது நினைவு கூறத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post