Title of the document


புதுச்சேரி: 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் புதுச்சேரி மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக முதல்வர் பேசியதாவது
7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஜனவரி 2016-ல் இருந்து நிறைவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 2016-ல் இருந்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 16 முதல் ஆகஸ்ட் 16 வரை உள்ள நிலுவைத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசை அணுகுவோம்.
அதே போல் பொதுத்துறை, கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஊதியம் உயர்வு தொடர்பாக குழு அமைக்கப்படும்.
பகுதி நேரம், தினக்கூலி ஊழியர்களுக்கும் ஊதிய சீரமைப்பு செய்யப்படும். மேலும், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post