திருக்கோவிலூர் உண்டு உறைவிடப் பள்ளியில் 2 மாணவர்கள் மர்மமான
முறையில் உயிரிழந்ததையடுத்து, அப்பள்ளிக்கு செப்.11-ம் தேதி வரை விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர், சந்தப்பேட்டையில் அன்னை தெரசா சமூக சேவை சங்கத்தின் அரசு நிதி உதவி பெறும் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் பயின்று வந்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார்(8), அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ராஜதுரை (8) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், காவல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மருத்துவக் குழுவினர் அங்குள்ள மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டதாலும், மாணவர்களுக்கு இடமாற்றம் அவசியம் என்று கருதியதாலும் வரும் செப்.11-ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், இறந்த மாணவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான், உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்று முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் தெரிவித்தார்.
திருக்கோவிலூர், சந்தப்பேட்டையில் அன்னை தெரசா சமூக சேவை சங்கத்தின் அரசு நிதி உதவி பெறும் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் பயின்று வந்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார்(8), அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ராஜதுரை (8) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், காவல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மருத்துவக் குழுவினர் அங்குள்ள மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டதாலும், மாணவர்களுக்கு இடமாற்றம் அவசியம் என்று கருதியதாலும் வரும் செப்.11-ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், இறந்த மாணவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான், உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என்று முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் தெரிவித்தார்.
Post a Comment