கடலூர் மாவட்ட அரசு உயர்நிலை பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மாணவர்கள் கோயில் வளாகம், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, ஆகிய எந்த வசதியும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு அருகில் குளம் இருப்பதால் மாணவர்கள் குளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதிகளவில் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மாணவர்கள் கோயில் வளாகம், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, ஆகிய எந்த வசதியும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு அருகில் குளம் இருப்பதால் மாணவர்கள் குளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதிகளவில் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Post a Comment