"நாம் பிறப்பது என்பதே மிகவும் அரிதான செயல் என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதைவிட மிகவும் சிரமமானது தான் நாம் வாழும் சமூகத்தில் நம்மை செம்மைபடுத்தி வாழ்வது என்பது.நாம் கடந்த வந்த பாதை மிகவும் நீண்ட கால பின்னோக்கிய பயணம். பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் தாண்டி மனிதன் வாழ பழகிக் கொண்டான்.அவன் வாழ்வை துவங்கும் ஆரம்பத்திலேயே அவனுக்காக காத்திருந்தது மூடப்பழக்க வழக்கங்களும், தேவையற்ற சடங்குகளும் அவனை கட்டுப்பாட்டுக்குள் வாழ வைத்தன என்பதை விட ஒரு வட்டத்திற்குள் அடக்க முயன்றன என்பது மட்டும் நிதர்சணமான உண்மை. அந்த வட்டத்தை விட்டு அவன் வெளியே வர அவன் பட்ட பாடு பெரும்பாடு.மெல்ல மெல்ல தார்சாலையில் முளைக்கும் தாவரமாய் மேலே உயர ஆரம்பித்தான். பல நிலைகளை தாண்டி மனித சமுதாயம் ஒரு நிரந்தர நிலையை அடைந்தது. அத்தகைய "சமூகம் வன்முகமாக இல்லாமல் மென்முகமாக மாற சமூகமே சுமூகமாக செல்".
பாசமிகு பந்தத்துடன்
பாடலாசிரியர்
*பண்டரி நாதன்*
வெளியீடு: Kaakitham Pathippagam/Kaakitham Publications
விற்பனை: மெரினா புத்தக நிலையம்/ MarinaBooks.com
விலை: ரூ.150/-
Post a Comment